நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 08, 2013

இமையோர் நாயகனே!.

 சிவராத்திரி நெருங்கி வரும் வேளையில்
'' சிவாய நம '' என்று சிந்தித்திருக்க...

சிவனே என் செழுஞ்சுடரே!...
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம்
ஏழாம் திருமுறை,  திருப்பதிக எண் - 26.
தலம் - திருக்காளத்தி (காளஹஸ்தி).

செண்டா டும்விடையாய் சிவனே என் செழுஞ்சுடரே 
வண்டா ருங்குழலாள் உமை பாக மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. - 1


இமையோர் நாயகனே இறைவாஎன் இடர்த்துணையே
கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள்
அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. - 2


படையார் வெண்மழுவா பகலோன்பல்  உகுத்தவனே
விடையார் வேதியனே விளங்குங்குழைக் காதுடையாய்
கடையார் மாளிகைசூழ் கணநாதனெங் காளத்தியாய்
உடையாய் உன்னையல்லால் உகந்தேத்த மாட்டேனே. - 3


மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே
குறியே என்னுடைய குருவேஉன்குற் றேவல்செய்வேன்
நெறியே நின்றடியார் நினைக்குந்திருக் காளத்தியுள்
அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. - 4


செஞ்சே லன்னகண்ணார் திறத்தேகிடந் துற்றலறி
நஞ்சேன் நானடியேன் நலமொன்றறி யாமையினால்
துஞ்சேன் நானொருகாற் றொழுதேன் திருக் காளத்தியாய்
அஞ்சா துன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. - 5


பொய்யவ னாயடியேன் புகவே நெறியொன் றறியேன்
செய்யவ னாகிவந்திங் கிடரானவை தீர்த்தவனே
மெய்யவ னேதிருவே விளங்குந்திருக் காளத்திஎன்
ஐயநுன் றன்னையல் லால் அறிந்தேத்த மாட்டேனே. - 6


கடியேன் காதன்மையாற் கழற்போதறி யாதஎன்னுள்
குடியாக் கோயில்கொண்ட குளிர்வார்சடை யெங்குழகா
முடியால் வானவர்கள் முயங்குந்திருக் காளத்தியாய்
அடியே னுன்னையல்லால் அறியேன்மற் றொருவரையே. - 7


நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற் கொழுந்தேயென் குணக்கடலே
பாறார் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய்
ஏறே உன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே. - 8


தளிர்போல் மெல்லடியாள் தனையாகத் தமர்ந்தருளி
எளிவாய் வந்தெனுள்ளம் புகுதவல்ல எம்பெருமான்
களியார் வண்டறையுந் திருக்காளத்தி உள்ளிருந்த
ஒளியே  உன்னையல்லால் இனியொன்றும்  உணரேனே. - 9


காரூ ரும்பொழில்சூழ் கணநாதனெங் காளத்தியுள்
ஆரா இன்னமுதை அணிநாவலா ரூரன்சொன்ன
சீருர் செந்தமிழ்கள் செப்புவார் வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப் பொன்றிலரே. - 10



தென்னாடுடைய சிவனே போற்றி!...
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!...

''திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..