நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 21, 2012

திருவெம்பாவை - 03

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 
திருவெம்பாவை

எமக்கும் ஏனோர்க்கும் தங்கோன்

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்! - 05

திருமால் ாக அவாராகியும்  நான்முகன் அன்ன வடிவாகியும் - தேடிக் கண்டறிய முடியாத  திருவடிகளையும் திருமுடியினையும் உடையவன். அத்தகைய அருட்பெரும்சோதியாகிய இறைவன் உறையும் அண்ணாமலையினை நாம் முழுமையாக அறிந்து கொள்ளமுடியும் என்றல்லவா நீ பேசுகின்றாய்!..

பாலுடன் தேனும் சுரந்து  - கலந்த சுவையைப் போலத் தித்திக்கத் தித்திக்கப் பேசும் வாயாடிப் பெண்ணே!...உன் பேச்சு கேட்பவரை மயங்க வைக்கும் மாயப்பேச்சு!...வஞ்சகீ..வா...வந்து கதவைத் திற!... 

அந்த விண்ணும் இந்த மண்ணும் மற்றுமுள்ள சர்வலோகமும் கூடி முயன்றால் கூட அறிந்து கொள்ள முடியாத அருமை பெருமைகளை உடைய  ஈசன் -  எளியவர்களாகிய நம்மை -  நம் பொருட்டு - தானே முன் வந்து நம்மிடையே மலிந்து கிடக்கும் தவறுகளை எல்லாம் மன்னித்து, ஆட்கொண்டு அருளி தன்னுடைய திருக்கோலத்தினைக் காட்டி நம்மைப் பரிவுடன் பரிபாலிக்கின்றான். 

அப்படி சீராட்டும் ஐயனின் அரும்  குணத்தையும்  பெரும் திறத்தையும் உவந்து உள்ளுருகி ''சிவனே! சிவனே!'' என்று பாடுகின்றோமே உனக்குக் கேட்கவில்லையா?... ஈசன் பெருமையினை உணர்ந்து துயில் நீங்கி எழாது படுக்கையில் கிடக்கின்றாய்!... 

அடர்ந்த கருங்கூந்தலில் நறுமணச்சாந்தினைப் பூசி அழகாக முடித்தவளே!...இது உனக்கு தகுமா?...

மானேநீ நென்னலை நாளைவந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போனதிசை பகராய்! இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன்வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்! - 06

பாவாய்!...எம் தோழி!...நாளை புலரும் போதில் நானே வந்து உங்களை எல்லாம் எழுப்புவேன் என்று கூறினாய்!...ஆனால் இன்று பொழுது புலர்ந்தும் சிறிதும் நாணம் இன்றித் தூங்குகின்றாய்!...நேற்று நீ சொன்ன சொல் போன திசை எது என்று அறிவாயா?...உனக்கு மட்டும் இன்னும் புலரவில்லையா!...

ானுலத்ினும் இந்ிலுலத்ினும்ற்றுமுள்ள ி உலத்ினும் அறிந்ு கொள்வற்கு அரியன். அந் ஈசன் ானே முன் வந்ு நம்மைக் கத்ஆட்கொண்டுளும் கற்சேவிகை உடையன். 

அந்த் ிருவிகை மெய்யுருகப் பாடிப் பிி - இங்கு உன் வாசுக்கு வந்த எங்கிடம்ாய் ிறந்ு பல் புக்கையில் கிடக்கின்றாய்.. 

ஊன் உருகி உன் உள்ளம் உருகவில்லையா உனக்கு? உருகாத் தன்மை உனக்கே உரியது போலும்!... நமக்கும் பிறர்க்கும் தனிப் பெருந்தலைவனாகத் திகழும் சிவபெருமானைப் பாடிப் பரவிட இனியாவது துயில் நீங்கி எழுந்து வாராய்!....
ிருச்சிற்றம்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..